Friday, November 13, 2009


சிறுகதை

முதியவர்களின் கேள்விகள் அறியாமையில் இருந்து எழுவதில்லை.மாறாக ஆதங்கத்தில்,இயலாமாயில்,பயத்தில் இருந்தே உருவாகிறது என்பதை நாம் ஏன் மறந்து போனோம் என்பதை இந்த சிறுகதை நினைவூட்டுகிறது.

புல்வெளிக்கு நடுவில் உள்ள ஒரு பெஞ்சில் வயதான அப்பாவும் மகனும் உட்காந்து இருக்கிறார்கள்.மகன் நியூஸ் பேப்பர் படித்து கொண்டு இருக்கிறான்.அப்பாவுக்கு 60 வயது இருக்கலாம் புல்வெளியை பார்த்தபடி இருக்கிறார்.அப்போது எங்கிருந்தோ ஒரு குருவி வந்து மரக்கிளையில் உட்காருகிறது.அதை அப்பா கவனமாக பார்க்கிறார்.குருவி தாவி பறக்கிறது.அது என்னவென்று மகனிடம் கேட்கறார்.அவன் குருவி என்று சொல்லி விட்டு பேப்பர் படிக்கிறான்.அவர் மறுபடியும் அதையே பார்த்து கொண்டு இருந்துவிட்டு அது என்னவென்று கேட்கிறார்.

அவன் குருவி என்று அழுத்தமாக சொல்லுகிறான்.இப்போது குருவி பறந்து புல்வெளியில் உட்கார்ந்து வால் அசைக்கிறது.அப்பா மறுபடியும் அது என்னவென்று கேட்கிறார்.மகன் சற்றே எரிச்சலுடன் 'குருவீப்பா. கு...ரு...வி'..என்று ஒவ்வோரு எழுத்தாக சொல்லுகிறான்.குருவி ஒரு கிளை நோக்கி பறக்கிறது.அப்பா மறுபடியும் கேட்கிறார...அது என்ன? மகன்..''குருவி..குருவி..எத்தனை தடவை சொல்லுவது? உங்களுக்கு அறிவு இல்லையா? என்று கோபத்தில் வெடிக்கிறான்.அப்பா மெளனமாக வீட்டுக்குள் சென்று உள்ளே இருந்து தனது பழைய டைரி ஒன்றை எடுத்து வந்து அவனிடம் நீட்டி ''உரக்கப்படி''என்கிறார்.அவன் சத்தமாக படிக்கிறார்.

என் மகனுக்கு மூன்று வயதாகியபோது அவனை பூங்காவுக்கு அழைத்து போனேன்.அங்கே ஒரு குருவி வந்தது.அது என்ன என்று பையன் கேட்டான்.குருவி என்று பதில் சொன்னேன்.அவன் அதை உற்று பார்த்து விட்டு அது என்னவென்று மறுபடியும் கேட்டான்.நான் அதே உற்சாகத்துடன் குருவி என்று பதில் சொன்னேன்.திருப்தி அடையாத என் மகன் 21 முறை அதே கேள்வியை கேட்டு கொண்டிருந்தான்.நான் எரிச்சல் அடையாமால் கோபம் கொள்ளாமால் ஒவ்வொரு முறையும் சந்தோசமான குரலில் அது குருவி என்று சொல்லி அவனை கட்டிக்கொண்டேன் என்று அந்த டைரியில் உள்ளது.


டைரியை படித்து முடித்த மகன்,அப்பா போல் ஏன் பொறுமையாகத் தன்னால் பதில சொல்ல முடியவில்லை என்று உணர்ந்தவன் போல,அப்பாவின் தலையை கோதி அவரை கட்டி கொள்ளுகிறான்


Thursday, November 12, 2009

Tamil editor
http://wk.w3tamil.com/code/w3tamil_widget/w3tamil_widget_includes/images/w3TamilWK_banner_w120xh44.gif
Web Tamil99 Keyboard

Wednesday, November 11, 2009

வாஸ்து ...

இது ,

காற்றுவரும்...
வாசல் அதை பூட்டிவிடும் !

உன்
கழிவறையில் ...
உணவு மேசை போட்டுவிடும் !!
சாதனை
சென்ற வாரம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூளை மரணம் ஏற்பட்டவரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு அவரது சிறுநீரகங்கள் இருவருக்கும் - ஒன்று அரசு பொது மருத்துவமனை பிணியாளர் ஒருவருக்கும் மற்றொன்று ஸ்டான்லி (இசுடானுலி) மருத்துவமனை பிணியாளர் ஒருவருக்கும்- பொருத்தப்பட்டு இரண்டு சிறுநீரகங்களும் நன்றாக இயங்கி வருகின்றன. கண்கள் இரண்டும் எழும்பூர் கண் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இருவருக்கு பார்வையும் இருவருக்கு மறுவாழ்வும் கிடைத்திருக்கின்றன

சென்ற வருடம் அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஹிதேந்திரனின் இதயம் பெறப்பட்டு மற்றொருவருக்கு பொருத்தப்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அதே போல் இந்த முறை அரசு மருத்துவமனையிலிருந்து பெறப்பட்டு அரசு பொது மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி கரமாக நடந்து முடிந்து விட்டது. ஸ்டான்லி (இசுடானுலி) மருத்துவமனையில் மூன்று பேருக்கு கல்லீரல்மாற்று மருத்துவ சிகிச்சை நடந்து முடிந்து விட்டது

இந்தியாவிலேயே மாநில அரசு மருத்துவமனைகளில் முற்றிலும் இலவசமாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை எல்லாம் நடப்பது தமிழகத்தில் தான்

தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகள் இந்தியாவின் பிற மாநிலங்களை விட பல மடங்கு உயர்ந்திருப்பது நாம் அறிந்ததே. இப்பொழுது சிறப்பு சிகிச்சை அளிப்பதிலும், நாம் பிற மாநிலங்களை விட பல மடங்கு முன்னேறி வருகிறோம்

மழை

ஜன்னலோர இருக்கைக்கு
சண்டையிட்ட இருவரை
சமாதானம் செய்துவைத்தது!

மழைத்துளி

கல்லூரிப் பெண்ணொருத்தியை
காற்றின் உதவியோடு குடையை விலக்கித்
தொட்டுப் பார்த்தது!

காளான்

நேற்று நனைந்த சிறுவனுக்கென
குடை விரித்திருக்கிறது
இயற்கை

ஈரம்

காடு மலைகள் கூட
குளிர்ந்து கிடக்கின்றன
கண்ணாடிக்கோ வியர்த்திருக்கிறது!

வலி

மழை அடித்ததால்
வீங்கிப் போயிருக்கிறது
வீதியில் கிடக்கும் மரப்பொம்மைக்கு

பள்ளி வேலை நாள்

எங்கள் வீட்டைக் கடக்கிற
மழை நீரில் கப்பலுக்குப் பதிலாக
காகிதம் மிதக்கிறது

Tuesday, November 10, 2009

History

கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பெயர் பெற்ற வரலாறு

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா!

1.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.
2. ஆப்பிள் (APPLE): ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an Apple" என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.
3. கூகுள் (GOOGLE):சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.
4.ஹாட் மெயில் (HOTMAIL) இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.
5. இன்டெல் (INTEL): இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கி NTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.
6. மைக்ரோசாப்ட் (MICROSOFT): பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.
7. யாஹூ (YAHOO): தொடக் கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David’s Guide to the World Wide Web" என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்

Monday, November 9, 2009




பசிக்கும்போது
உண்ணா விட்டால்...
நீ உண்ணும்போது
உனக்கு பசிக்காது..!!
******************
சான்றோர் புத்திமதி கேளான்..
சறுக்கியதும் தானும் புத்திமதி
சொல்ல தொடங்குவான்..??
******************
போதைக்கு...
ஒரு கோப்பை மது போதும்...
தெளிவதற்கோ..?
******************
நீந்த கற்றுகொண்டால்....
இரும்பும் கூட நீரில்
மிதக்கும்..!!
******************
பலமணிநேர சிந்தனவாதியின் வெற்றி..
நொடி பொழுதில் தீர்மானிக்க பட்டுவிடும்..!!
******************
நிலைப்பதாய்
இருந்தால் நேசி...
கிடைக்கும் என்றால்
முயற்சி செய்..!!
******************
'குப்பையை' பேசி..
கோபுரத்தில் சுகிக்கிறது ஒரு கூட்டம்..?!
கோபுரத்தை கனவு கண்டு..
குப்பையிலேயே மடிகிறது ஒரு கூட்டம்..!
******************
எது சலிக்காமல்
கிடைக்கிறதோ...
அது விரைவில்
சலித்து விடும்...!!?
******************
எத்தனை எழுதினாலும் தீரவே மாட்டேன் என்கிறது...?
என் பேனா மையும்....
உன்னை பற்றிய கவிதைகளும்...!!
******************
கொண்டு வருகிறேன்...தினமும்..,
கொடுக்கத்தான் முடிந்ததில்லை ஒருமுறை கூட...
ரோஜாவும்...
என் கடிதமும்..!!
******************
கரண்ட் கம்பியில் சிட்டுகுருவிகளுக்குள் சண்டை
மேல் கூரை இல்லாத குளியலறையில்
அவள் குளிக்கிறாள்..!!
******************
நீ பயணிக்கும் அந்த பேருந்தில் அனைவரும்
புரிந்து கொண்டார்கள்-என் காதலை..
உன்னை தவிர...!!!
******************
உன்னிடம் பேச சேர்த்துவைப்பேன் வார்த்தைகளை...
'அனுமன் வால்'போல
உன்னை பார்த்தும்...
கரைந்து போகும் அத்தனையும் 'கற்பூரம்' போல...!!
******************
உன்னை மட்டுமே அன்பு செய்யும் என்னை பார்த்தும்
உனக்கு கோபம் வருவதுபோல்..
என்னை தவிர உன்னை யார் அன்பு செய்தாலும் ஏனோ
எனக்கு கோபம் வருகிறது..!!
******************
உன்னால் தான் 'விடியல்'
எத்தனை அழகானது என்று தெரிந்துகொள்ள முடிந்தது..?!
உன்னால் தான் 'அஸ்தமனம்'
எத்தனை கொடுமையானது என்றும் தெரிந்து கொண்டேன்..!!
******************
நம் குழந்தைக்கு சோறூட்ட
நிலவை தேடிகொண்டிருக்க வேண்டியதில்லை...
நீதான் இருக்கிறாய் அல்லவா பக்கத்திலேயே..!!





"ஒருமுறையாவது தமிழன் என்ற உணர்வுகளை நம் இருதயத்தில் இருத்தி தமிழ் வளர்க்க முன் வருவோம்” வாழ்வொன்று வாளேந்தி வாட்டும் நிலை வந்திடினும் மார்புத் தட்டி தமிழனென்று வீரமாய் உரைத்து வீழத்துணிந்து விடு மனிதா - நீ வீழத்துணிந்து விடு!

Sunday, November 8, 2009

வணக்கம்

என் இணைய தளத்திற்கு வ‍ந்தமைக்கு நன்றி.

மா. மணிகண்டன்.
குமரகுரு கல்லூரி.